Tuesday 7th of May 2024 07:35:08 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஐஸ்வா்யா ராய், அவரது மகள் ஆரத்யா  கொரோனோவில் இருந்து மீண்டனர்!

ஐஸ்வா்யா ராய், அவரது மகள் ஆரத்யா கொரோனோவில் இருந்து மீண்டனர்!


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பிரபல இந்தியத் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆரத்யா ஆகியோர் குணமடைந்து வீடு திரும்பினர்.

எனினும் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை ஐஸ்வர்யா ராய் அவரது மகள் ஆரத்யா ஆகியோருக்குக் கடைசியாக செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதையடுத்து இருவரும் நேற்று வீட்டிற்கு திரும்பினா்.

இதனை நடிகர் அபிஷேக் பச்சன் தனது சமூகவலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.


Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE